Wednesday, December 30, 2009

விஜய் டி.வி.,யில் மீண்டும் கமல்


சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த கமல்ஹாசனுக்கு ‌பொன்விழா நடத்தி கவுரவித்த விஜய் டி.வி.,யில் கமல்ஹாசன் பங்குபெறும் நிகழ்ச்சி வரப்போகிறது. சின்னத்திரை உலகில் நிலவும் போட்டிகளுக்கு மத்தியில் எப்போதுமே புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி., கமல்ஹசன் பொன்விழாவை முன்னிட்டு கமல்50 என்ற நிகழ்ச்சியை நடத்தி பெரும் வரபேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி கமல்ஹாசனையும் ரொம்பவே கவர்ந்து விட்டது போல! அதனால்தானோ என்னவோ... விஜய் டி.வி., விரைவில் நடத்தவிருக்கும் புதிய ஷோவில் கமல்ஹாசன் பங்கேற்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். பங்கேற்பு என்றால் கெஸ்ட்டாக அல்ல. இந்தியில் அமிதாப் பச்சன் நடத்திய குரோர்பதி போன்று, தமிழில் கமல்ஹாசன் முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சியை வழங்கப்போகிறாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.
Source-Dinamalar

Monday, December 28, 2009

குறைந்து வரும் விவசாய நிலங்கள்

அரிசி இறக்குமதி செய்ய,​​ நீண்டகா​ லத்​திற்​குப் பின்​னர் மத்​திய அரசு சமீ​பத்​தில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.​ இந்தியாவின் உயிர்நாடித் ​ தொழில் விவசாயம்.​ அதிலும்,​​ அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் ​ விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் ​(2009,​ ஜூலை 24-ம் தேதி)​ மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி,​​ இந்தியாவின் ​ அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது.​ அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் ​ பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம்,​​ பிகார்,​​ மேற்கு வங்கம்,​​ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் ​ பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.​ ​

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது.​ மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.​ ஆனால்,​​ இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.​ தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.​ ஆம்,​​ காவிரிப் படுகைப் ​ பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.​ இதனால்,​​ வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் ​ மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.​ ​ ​

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி,​​ மருத்துவமனை,​​ தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் ​ உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.​ இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த ​ வேண்டும்.

2005-06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.​ இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் ​ நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.​ ​(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும்,​​ தஞ்சை ​ மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.)​ நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி ​ பெற்று வருகிற நிலையில்,​​ தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்,​​ காஞ்சிபுரம்,​​ திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.​ ​

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும்,​​ இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் ​ இருக்கிறது.​ சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம்,​​ கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.​ ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது.​ 1974-ல் ​ தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன.​ ஆனால்,​​ தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம்.​ இதனால் ஆற்றுப் படுகைகளில் ​ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன.​ இதனால்,​​ தண்ணீர் இல்லாத நிலையில் -​ வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் -​ விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.​ இதனால் ​ விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும்.​ ஆனால்,​​ 2005}06-ல் 61,16,145 ​ டன்கள் தான்.​ இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால்,​​ விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும்,​​ தொழிற்சாலைகளாகவும்,​​ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய ​ காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள்,​​ விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட,​​ வர்த்தக வங்கிகள் ​ தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.​

இந்நிலை மாறி ​ விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த ​ விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் ​ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய,​​ மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ​ குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.​ அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் ​ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.​ ​

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.
Source-Dinamani

Thursday, December 24, 2009

ஹிட்லருக்கு யூதர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது ஏன்?



ஜெருசலேம் : "ஜெர்மன் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர், தன் தாயை, யூத இனத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் விஷம் கொடுத்து கொன்றார், என, நம்பியதாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது' என, புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜோகிம் ரீக்கர் என்பவர், "முதல் உலகப் போர் படுகொலைகளுக்கு எப்படி வழிவகுத்தது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஹிட்லரின் தாய் கிளாரா, அவரின் வாழ்க்கையில் ஒரு அழியாத நினைவை விட்டு சென்றார். ஹிட்லருக்கு 18 வயதிருக்கும் போது, அவரது தாய்க்கு, மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு யூத இனத்தை சேர்ந்த டாக்டரான, எட்வர்டு பிளாக் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். அவர், கிளாராவிற்கு, ஐயடோபார்ம் மருந்து அளித்தார். இதை தொடர்ந்து, கிளாரா, கடந்த 1907ம் ஆண்டு, தன் 47வது வயதில் உயிரிழந்தார். இதிலிருந்து, யூத டாக்டர், தன் தாய்க்கு விஷம் கொடுத்து கொன்றதாக, ஹிட்லர் நம்ப தொடங்கினார். இதனாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது.இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Source-Dinamalar

Tuesday, December 22, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது


புதுடில்லி : புதுடில்லியில் 2009ம் ஆண்டின் பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சி.என்.என். ஐ.பி.என்., "டிவி'யின் "சிறந்த இந்தியர்' விருது நேற்று வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் நடிகர் கமல்ஹாசன் உட்பட பலருக்கு, விருது வழங்கினார்




Source-Dinamalar

Saturday, December 19, 2009

தனி ஈழம் வேண்டுமா? கனடாவில் இன்று ஓட்டெடுப்பு


தனித் தமிழ் ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி, கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இன்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். ஓட்டெடுப்பின் முடிவுக்கேற்ப, இலங்கையில் அமைதி நிலவுமா, போர் தொடருமா என்பது தெரியவரும்.
இலங்கையில் நடந்த நான்காவது கட்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. சாதாரண ஆயுதக் குழுவாக துவங்கி, முறையான ராணுவமாக வளர்ந்த விடுதலைப் புலிகளின் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலத்துக்கு, தனி ஈழம் பற்றி சிந்தித்துக் கூட பார்க்க முடியாது என்பதே இலங்கைத் தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள், மவுனமாகத் தான் இருந்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளனர். ஆனால், வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடும், எண்ண ஓட்டமும் வேறாக உள்ளது. போர்க் காலத்தில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த அவர்களில் பெரும்பாலோர், இன்று தங்கள் உழைப்பால் முன்னேறி நல்ல நிலையில் உள்ளனர். வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை, போராட்டக் குழுக்களுக்கு நிதியுதவியாகவும் வழங்கி வந்தனர்.

புலிகளின் நடமாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்ட பிறகு, தமிழ் ஈழம் என்பது, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடம் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி உள்ளது. "தனி ஈழம் தான் நமது இறுதி லட்சியம்' என ஒரு சாராரும், "அதெல்லாம் இனி பகல் கனவு' என, இன்னொரு சாராருமாக, உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள் இரண்டுபட்டுக் கிடக்கின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கனடாவில் வசிக்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், இலங்கைத் தமிழர்களின் உண்மையான உள்ளக் கிடக்கையை அறிந்து கொள்ளும் விதமாகவும், இன்று கனடா முழுவதும் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை, 12 மணி நேரம் நடக்க உள்ள இந்தத் தேர்தலுக்காக, 31 இடங்களில் 52 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, கனடா வாழ் தமிழர்களுக்கான தேர்தல் கூட்டமைப்பு செய்துள்ளது.

இதன் செய்தித் தொடர்பாளர் சிவ விமலச்சந்திரன் கூறுகையில், ""இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை, இலங்கைத் தமிழர்கள் தவற விடக் கூடாது. காழ்ப்புணர்ச்சிகளையும், மனமாச்சரியங்களையும் ஓரங்கட்டிவிட்டு செயல்பட வேண்டிய நேரமிது,'' என்றார். "ஓட்டுப்பதிவு செய்பவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர் பதிவு தேவையில்லை; இலங்கைத் தமிழர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஏதாவது ஓர் ஆவணத்தைக் காட்டினால் போதும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்தலில், தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைத்தால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் அடுத்த திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Source-Dinamalar

ஏ.ஆர்.ரஹ்​மான் காலண்​டர் வெளி​யீடு

இசை​ய​மைப்​பா​ளர் ஏ.ஆர்.ரஹ்​மான் அறக்​கட்​ட​ளை​யின் நிதி​யு​த​விக்​காக,​​ அவ​ரு​டைய அரிய புகைப்​ப​டங்​க​ளு​டன் கூடிய 2010-ம் ஆண்டு காலண்​டர் வெளி​யி​டப்​ப​டு​கி​றது.​
ஏ.ஆர்.ரஹ்​மான் அறக்​கட்​டளை,​​ தற்​போது சென்னை மாந​க​ராட்​சிப் பள்​ளி​யில் பயி​லும் 30 மாண​வர்​க​ளுக்கு இல​வச இசைக் கல்​வி​யைப் பயிற்​று​வித்து வரு​கி​றது.​ வரும் ஆண்டி​லி​ருந்து மேலும் அதிக எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு இசைக் கல்​வி​யைப் பயிற்​று​விக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளது.​

இதற்கு நிதி சேர்க்​கும் வகை​யில் ஆடியோ மீடியா எஜு​கே​ஷன் நிறு​வ​னத்​தின் துணை நிறு​வ​ன​மான வேர்ல்​டு​வைடு நிறு​வ​னம் இந்த காலண்​டரை வெளி​யி​டு​கி​றது.​ இந்த காலண்​டர் ​ இசை,​​ மொழி,​​ காதல் ஆகி​ய​வற்றை தலைப்​பு​க​ளா​கக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்​மா​னின்​மேற்​கோள்​க​ளு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ இந்த காலண்​ட​ரைப் பெற www.arr​ahm​an.com ​ என்ற இணை​ய​த​ளத்​தைத் தொடர்​பு​கொள்​ள​லாம்

Friday, December 18, 2009

பருவநிலை மாற்றத்தால் 40 ஆண்டுகளில் 100 கோடி பேர் இடம்பெயரும் அபாயம்



"பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள், தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்வர்' என, குடியேற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி: பருவநிலை மாற்றத்தால், வரும் 2050ம் ஆண்டு, இரண்டரை கோடி முதல் 100 கோடி மக்கள் வரை இடம் பெயர்வர். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கே எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள், இடம்பெயர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், கடந்தாண்டு திடீரென ஏற்பட்ட பேரழிவுகளால், இரண்டு கோடி மக்கள் வீடிழந்துள்ளனர். இவ்வாறு பருவநிலை மாற்றத்தால் அகதிகளாக மாறியோர், பலர் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வளமான பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலோர், ஏற்கனவே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கு சென்றுள்ளதால், அங்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, பெரும்பாலான நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப் பால் ஏற்படும் இடம் பெயர்தலை தங்கள் நாட்டுக் குள்ளேயே சமாளித்துக் கொள் கின்றன. ஆனால், சிறிய தீவுகள், கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் போது சர்வதேச அளவில் இடம் பெயரும் நிலை உண்டாகிறது. மேலும், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள் வரை இடம்பெயர்வர் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளின் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கையும் இரட்டிப் பாகி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாற்றங்களால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளவிலான வெப்பநிலை 2 டிகிரி சென்டிகிரேடு முதல் 5 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரிக்கலாம். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது


Source-Dinamalar