பயங்கரவாத பயிற்சிகள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் எல்லையிலும் தான் பெரும்பாலும் நடக்கின்றன, என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹிலாரி குறிப்பிடுகையில், "பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் தான் பெரும்பாலான பயங்கரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நடக்கக்கூடிய நாசவேலைக்கான உத்தரவுகளும் இந்த பகுதியிலிருந்து பிறப்பிக்கப்படுகின்றன. இது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பயங்கரவாத அடிப்படை கட்டமைப்புகளை வேரறுக்க தேவையான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதியில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.
"வெளிநாடுகளில் நாசவேலையை அரங்கேற்றும் தளமாக அமெரிக்காவை பயன்படுத்தி கொண்டார் பாகிஸ்தானை சேர்ந்த டேவிட் கோல்மேன்' என, அமெரிக்க செனட் உறுப்பினர் ஜோ லிபர்மேன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "டேவிட் கோல் மேன் அமெரிக்க குடியுரிமை போர்வையில் பிறரது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் அடிக்கடி இந்தியா சென்றுள் ளார். அமெரிக்காவில் இருந்த படியே மும்பை தாக்குதலுக்கு வழி வகுத்துள்ளார். "தாவூத் கிலானி' என்ற தனது முஸ்லிம் பெயரை டேவிட் கோல் மேன் என மாற்றிக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடமாட்டார்கள் என நாம் இனிமேல் நினைக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் மூலமாக தான் இதுபோன்ற நபர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியுள்ளது' என தெரிவித்தார்
Source-Dinamalar
Friday, December 11, 2009
Thursday, December 10, 2009
ராவண் படத்தை வாங்க துடிக்கும் பிக் பிக்சர்ஸ்
தமிழ். தெலுங்கு மற்றும் இந்தியில் டைரக்டர் மணிரத்னம் இயக்கி வரும் படம் ராவண். அபிஷேக் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தை முதலில் திருபாய் அம்பானிக்கு சொந்தமான பிக் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது. பின்னர் ஏற்பட்ட குளறுபடிகளால் ராவண் தயாரிப்பில் பிக் பிக்சர்ஸ் தன்னை விடுவித்துக் கொண்டது. இதையடுத்து மணிரத்னம் தனது சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் ராவண் படத்தை தயாரித்து வருகிறார். சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் ராவண் படத்தை வாங்க பிக் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறதாம். இதற்காக ஒரு பெரும் தொகையை கொடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மணிரத்னம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறாராம்.
Source:Dinamalar
Source:Dinamalar
Friday, December 4, 2009
வீறு கொண்டு எழுந்த "விரு"
மும்பை : மும்பை டெஸ்டில் எரிமலையாய் வெடித்தார் சேவக். அதிரடியாக ஆடிய இவர் அதிவேகமாக 250 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இன்றைய ஆட்டத்தில் 3 சதம் எடுத்து உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 293 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சேவக்கும் ஏமாற்றத்தை தந்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த 2வது டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. தில்ஷன் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 8 விக் கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்திருந்தது.
சதம் நழுவல்: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய மாத்யூசுக்கு சதம் அடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய பந்தை அடித்த இவர், 2வது ரன்னுக்காக வீணாக ஓடினார். அதற்குள் பந்தை பெற்ற சச்சின், மிக துல்லியமாக "த்ரோ' செய்ய தோனி "ஸ்ட்ம்ப்சை' தகர்த்தார். மாத்யூஸ் 99 ரன்களுக்கு பரிதாபமாக ரன் அவுட்டனார். ஓஜா சுழலில் வலகேதரா(8) வெளியேற, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முரளி விஜய் நம்பிக்கை: பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவக், தமிழக வீரர் முரளி விஜய் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். இலங்கை பந்துவீச்சை மிகச் சாதாரணமாக சமாளித்த இவர்கள் பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தனர். முரளிதரன் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்த முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், 87 (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுக்கு அவுட்டானார். சேவக், விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்து அசத்தியது.
சேவக் மிரட்டல்: துவக்கம் முதலே அதிரடி காட்டிய சேவக், 101 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் 17 வது சதம் கடந்தார். இலங்கை பவுலர் குலசேகரா வீசிய ஆட் டத்தின் 57 வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசிய இவர், 168 பந்துகளில் இரட்டை சதம் பதிவு செய்தார். இவருடன் இணைந்த ராகுல் டிராவிட் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெஸ்ட் அரங்கில் 58 வது அரை சதம் கடந்தார் டிராவிட். இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 79 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்திருந்தது. சேவக் (284), டிராவிட் (62) அவுட்டாகாமல் இருந்தனர். தற்போது இந்திய அணி 50 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் சேவக்கின் அதிரடி தொடரும் பட்சத்தில், இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
சாதனை மன்னன்: மும்பை டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தார் இந்திய வீரர் சேவக்.
* நேற்று 45 ரன்களை எட்டிய போது, டெஸ்ட் அரங்கில் மிக விரைவாக 6000 ரன்களை குவித்த 3 வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை 123 இன்னிங்சில் விளையாடியுள்ள இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன் சச்சின் (120 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (117 இன்னிங்ஸ்) ஆகியோர் இப்பெருமை பெற்றுள்ளனர்.
* இந்தியா தரப்பில் டெஸ்டில் 6 ஆயிரம் ரன்களை எட்டும் 8 வது வீரரானார் சேவக். இதற்கு முன் சச்சின் (12917ரன்) டிராவிட் (11244 ரன்), கவாஸ்கர் (10122 ரன்), கங்குலி (7212 ரன்), வெங்சர்க்கார் (6868 ரன்), லட்சுமண் (6855 ரன்) அசாருதின் (6215 ரன்), குண்டப்பா விஸ்வநாத் (6080 ரன்) ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இந்தியா சார்பில் அதிக முறை இரட்டை சதம் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை இவர் 6 முறை இந்த இலக்கை எட்டியுள்ளார். இப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் டிராவிட் (5 முறை) உள்ளார். சச்சின், கவாஸ்கர் இருவரும் தலா 4 முறை இரட்டை சதம் விளாசியுள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை 300 ரன்களை கடந்துள்ள சேவக், 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவர் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 319 ரன்கள் (2008, சென்னை) எடுத்துள்ளார். அடுத்து பாகிஸ்தான் (309, முல்தான், 2004), இலங்கை (284*, மும்பை, 2009), பாகிஸ்தான் (254, லாகூர், 2006), இலங்கை (201, காலே, 2008), பாகிஸ்தான் (201, பெங்களூரு, 2005) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார்.
* நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 284 ரன்கள் குவித்துள்ள சேவக், டெஸ்ட் அரங்கில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (309 ரன்), இங்கிலாந்தின் ஹம்மண்ட் (295 ரன்) ஆகியோர் முறையே இவ்வரிசையில் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ளனர்.
* 207 பந்துகளில் 250 ரன்களை நேற்று குவித்தார் சேவக். இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
* டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் சேவக், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், வெஸ்ட் இண்டீசின் லாரா ஆகியோர் தலா 2 முறை 300 ரன்கள் என்ற இலக்கை எட்டியுள்ளார். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் தற்போது 284 ரன்கள் எடுத்துள்ள சேவக், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 300 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேவக் 293 ரன்கள் எடுத்த நிலையில், முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் 3 சதம் அடித்த வீரர் என்ற சாதனை கைநழுவிப்போனது.
தமிழக வீரர் முரளி விஜய் : மும்பை டெஸ்டில் சேவக் 400 ரன்கள் அடித்து சாதனை படைப்பார் சேவக் என தமிழக வீரர் முரளி விஜய் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,"" மும்பை டெஸ்டில் முதல் சதம் அடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. சேவக்கின் ஆட்டம் பிரம்மிக்க வைத்தது. இலங்கை பந்து வீச்சை மிகவும் எளிதாக சமாளித் தார். முரளிதரன் சிறப்பாக பந்து வீசிய போதும், ரன் குவிப்பில் சேவக்கின் ஆதிக்கம் தொடர்ந்தது. சேவக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பந்தை தெளிவாக கவனித்துஆடுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அவரது ஆட்டத்தை விவரிக்க வார்த்தை இல்லை. '' என்றார்
Source :Dinamalar
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த 2வது டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. தில்ஷன் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 8 விக் கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்திருந்தது.
சதம் நழுவல்: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய மாத்யூசுக்கு சதம் அடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய பந்தை அடித்த இவர், 2வது ரன்னுக்காக வீணாக ஓடினார். அதற்குள் பந்தை பெற்ற சச்சின், மிக துல்லியமாக "த்ரோ' செய்ய தோனி "ஸ்ட்ம்ப்சை' தகர்த்தார். மாத்யூஸ் 99 ரன்களுக்கு பரிதாபமாக ரன் அவுட்டனார். ஓஜா சுழலில் வலகேதரா(8) வெளியேற, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முரளி விஜய் நம்பிக்கை: பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவக், தமிழக வீரர் முரளி விஜய் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். இலங்கை பந்துவீச்சை மிகச் சாதாரணமாக சமாளித்த இவர்கள் பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தனர். முரளிதரன் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்த முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், 87 (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுக்கு அவுட்டானார். சேவக், விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்து அசத்தியது.
சேவக் மிரட்டல்: துவக்கம் முதலே அதிரடி காட்டிய சேவக், 101 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் 17 வது சதம் கடந்தார். இலங்கை பவுலர் குலசேகரா வீசிய ஆட் டத்தின் 57 வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசிய இவர், 168 பந்துகளில் இரட்டை சதம் பதிவு செய்தார். இவருடன் இணைந்த ராகுல் டிராவிட் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெஸ்ட் அரங்கில் 58 வது அரை சதம் கடந்தார் டிராவிட். இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 79 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்திருந்தது. சேவக் (284), டிராவிட் (62) அவுட்டாகாமல் இருந்தனர். தற்போது இந்திய அணி 50 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் சேவக்கின் அதிரடி தொடரும் பட்சத்தில், இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
சாதனை மன்னன்: மும்பை டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தார் இந்திய வீரர் சேவக்.
* நேற்று 45 ரன்களை எட்டிய போது, டெஸ்ட் அரங்கில் மிக விரைவாக 6000 ரன்களை குவித்த 3 வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை 123 இன்னிங்சில் விளையாடியுள்ள இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன் சச்சின் (120 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (117 இன்னிங்ஸ்) ஆகியோர் இப்பெருமை பெற்றுள்ளனர்.
* இந்தியா தரப்பில் டெஸ்டில் 6 ஆயிரம் ரன்களை எட்டும் 8 வது வீரரானார் சேவக். இதற்கு முன் சச்சின் (12917ரன்) டிராவிட் (11244 ரன்), கவாஸ்கர் (10122 ரன்), கங்குலி (7212 ரன்), வெங்சர்க்கார் (6868 ரன்), லட்சுமண் (6855 ரன்) அசாருதின் (6215 ரன்), குண்டப்பா விஸ்வநாத் (6080 ரன்) ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இந்தியா சார்பில் அதிக முறை இரட்டை சதம் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை இவர் 6 முறை இந்த இலக்கை எட்டியுள்ளார். இப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் டிராவிட் (5 முறை) உள்ளார். சச்சின், கவாஸ்கர் இருவரும் தலா 4 முறை இரட்டை சதம் விளாசியுள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை 300 ரன்களை கடந்துள்ள சேவக், 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவர் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 319 ரன்கள் (2008, சென்னை) எடுத்துள்ளார். அடுத்து பாகிஸ்தான் (309, முல்தான், 2004), இலங்கை (284*, மும்பை, 2009), பாகிஸ்தான் (254, லாகூர், 2006), இலங்கை (201, காலே, 2008), பாகிஸ்தான் (201, பெங்களூரு, 2005) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார்.
* நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 284 ரன்கள் குவித்துள்ள சேவக், டெஸ்ட் அரங்கில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (309 ரன்), இங்கிலாந்தின் ஹம்மண்ட் (295 ரன்) ஆகியோர் முறையே இவ்வரிசையில் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ளனர்.
* 207 பந்துகளில் 250 ரன்களை நேற்று குவித்தார் சேவக். இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
* டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் சேவக், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், வெஸ்ட் இண்டீசின் லாரா ஆகியோர் தலா 2 முறை 300 ரன்கள் என்ற இலக்கை எட்டியுள்ளார். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் தற்போது 284 ரன்கள் எடுத்துள்ள சேவக், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 300 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேவக் 293 ரன்கள் எடுத்த நிலையில், முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் 3 சதம் அடித்த வீரர் என்ற சாதனை கைநழுவிப்போனது.
தமிழக வீரர் முரளி விஜய் : மும்பை டெஸ்டில் சேவக் 400 ரன்கள் அடித்து சாதனை படைப்பார் சேவக் என தமிழக வீரர் முரளி விஜய் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,"" மும்பை டெஸ்டில் முதல் சதம் அடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. சேவக்கின் ஆட்டம் பிரம்மிக்க வைத்தது. இலங்கை பந்து வீச்சை மிகவும் எளிதாக சமாளித் தார். முரளிதரன் சிறப்பாக பந்து வீசிய போதும், ரன் குவிப்பில் சேவக்கின் ஆதிக்கம் தொடர்ந்தது. சேவக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பந்தை தெளிவாக கவனித்துஆடுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அவரது ஆட்டத்தை விவரிக்க வார்த்தை இல்லை. '' என்றார்
Source :Dinamalar
Tuesday, December 1, 2009
உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது?
திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.
சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான "லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன.அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது.அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை.
விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள்.அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை.வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில்.கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.
எப்படி திரும்ப எழுந்தது?திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின.இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும்.இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.
திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்:பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட "கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.
இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.
உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை:உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது.இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.
இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம்.ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ்வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.
துபாயில் என்ன நடந்தது?துபாய் அரசுக்கு சொந்தமான "துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது.ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?
துபாய் திரும்ப எழுமா?துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Source :http://www.dinamalar.com/
சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான "லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன.அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது.அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை.
விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள்.அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை.வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில்.கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.
எப்படி திரும்ப எழுந்தது?திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின.இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும்.இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.
திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்:பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட "கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.
இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.
உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை:உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது.இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.
இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம்.ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ்வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.
துபாயில் என்ன நடந்தது?துபாய் அரசுக்கு சொந்தமான "துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது.ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?
துபாய் திரும்ப எழுமா?துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Source :http://www.dinamalar.com/
Subscribe to:
Posts (Atom)



