Tuesday, November 17, 2009

சச்சினை தாக்கரே விமர்சித்த விவகாரம்: நாடு முழுவதும் எதிர்ப்பு


மும்பை : "மும்பை அனைவருக்கும் சொந்தமானது' என, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியதை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா தலைவர் பால் தாக்கரே கருத்துக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் உட்பட பலர், தாக்கரேக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சச்சினை பாராட்டியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரராகத் திகழ்பவர் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட்டில் இவர் செய்துள்ள சில சாதனைகளை, அத்தனை எளிதில் யாராலும் முறியடித்து விட முடியாது. கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் சச்சின். அப்போது அவர், "நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவன்; அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால், முதலில் நான் ஒரு இந்தியன். மும்பை நகரம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது' என்றார். சச்சின் கூறிய இந்த கருத்து, சிவசேனா தலைவர் பால் தாக்கரேக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா கட்சி பத்திரிகையான "சாம்னா'வில், பால் தாக்கரே தலையங்கம் எழுதியுள்ளார். இதில், "மும்பை அனைவருக்கும் சொந்தமானது' என, சச்சின் கூறியதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தலையங்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது: இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம், அவர் மேலும் ஒரு சிங்கிள் (ஒரு ரன்) எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் தற்போது ஏற்படவில்லை. மும்பையை பெறுவதற்காக மராத்தியர்கள் கடும் போராட் டம் நடத்தினர். இதற்காக, 105 மராத்தியர்கள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அப்போதெல்லாம், சச்சின் பிறந்திருக்கவே மாட்டார். இது போன்ற கருத்துகளை தெரிவித்திருப்பதன் மூலம், மராத்திய மக்களின் இதயத்தில் இருந்து அவர் ரன் அவுட் ஆகிவிட்டார். அவரின் இந்த கருத் துக்கள், மராத்திய மக்களின் மனதை புண்படுத்தி விட்டன. கிரிக்கெட் களத்தில் இருந்து விலகி, அரசியல் களத்திற்கு செல்வதற்கு அவர் முயற்சிக்கிறார். அதற்காகவே, அவர் இது போன்ற தகவல்களை தெரிவித்துள்ளார். சச்சின், கிரிக்கெட்டில் மட்டும் கவனத்தைச் செலுத்தினால் போதுமானது. இவ்வாறு அதில் எழுதியிருந்தார்.

கண்டனம்: நாட்டுப் பற்றுடன் சச்சின் கூறியிருந்ததை, பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும், பால் தாக்கரேக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியதாவது: மாஸ்டர் பேட்ஸ் மேன் சச்சின், தன் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த வார்த்தைகளைத் தான் தெரிவித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரருக்கான உணர்வுடன் அவர், இதைத் தெரிவித்துள்ளார். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவுக்காகவே விளையாடுகிறார். எனவே, நான் முதலில் இந்தியன் என, அவர் கூறியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். சச்சினின் இந்த கருத்து, நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும். சிவசேனாவின் கருத்துக்களை மக்கள் ஒதுக்கி தள்ளி விடுவர். அவர்களின் அரசியல் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர். இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடி பெருமை சேர்த்துள்ளார். சச்சினைப் பற்றி சிலர் கூறிய சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு நான், எந்த முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு அசோக் சவான் கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் சுக்லா கூறியதாவது: சச்சினுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள விஷயங்கள் முற்றிலும் தேவையற்றவை. சச்சின் ஒரு தேசியவாதி. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் இந்தியர். அவரை இந்தியர் எனக் கூறுவது குற்றமா? முகமது அலி ஜின்னா எந்த வகையில் பேசினாரோ, அதே பாணியில் தான் தற்போது தாக்கரே பேசியுள்ளார். இந்த விஷயத்தில் எந்த ஒரு மராத்தியரும், சிவசேனாவுக்கு ஆதரவாக இருக்க மாட்டர். ஓட்டுகளைப் பெறுவதற்காக இதுபோல் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

பா.ஜ.,வின் ராஜ்ய சபாத் தலைவர் அருண்ஜெட்லி கூறுகையில், " சச்சின் பேசியது முழுவதும் சரி, அவரால் இந்தியாவுக்கு கவுரவம், அவர் கருத்தை யாரும் ஆட்சேபிக்க முடியாது' என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "கிரிக்கெட் விளையாட்டால், இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சச்சின். அவரை விமர்சிக்கும் தகுதி சிவசேனாவுக்கு இல்லை' என்றார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறும் போது, "இந்தியாவின் பெருமையை சச்சின் உயர்த்தி விட்டார்' என்று கூறியுள்ளார்.

அறிவுரையாம்: சச்சின் பற்றிய விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளதை அடுத்து, சிவசேனா இறங்கி வந்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறுகையில், "மும்பை பற்றி பேசியதற்காக சச்சினை, தாக்கரே விமர்சிக்கவில்லை. வயதில் மூத்தவர் என்ற முறையில் சச்சினுக்கு அறிவுரையாகத் தான், அவர் அதை கூறியுள்ளார்' என்றார்.

Source-Dianamalar

Monday, November 16, 2009

நிலத்தில் சரிந்து கிடக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு

நிலத்தில் சரிந்து கிடக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு:

 Building Collapsed In Shangai (06/30/2009)



At around 5:30am on June 30, an unoccupied building still under construction at china.

But the high-resolution photos are really amazing.













God Bless All Souls and give courage to all Shangai Residents along with China's NEW FLAT Owners,
check the bottom of the towers before buying..

சரஸ்வதி பாடலுடன் வகுப்பை ஆரம்பிக்கும் இஸ்லாமிய பள்ளி

அம்பேத்கர் நகர்:உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியில், தினமும் சரஸ்வதி பாடலுடன் வகுப்பு ஆரம்பமாகிறது.நம் நாட்டு தேசபக்தி கீதமான "வந்தே மாதரம்' பாடலை பாட, முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில், சதாசிபூர் கிராமம் உள்ளது.

கடந்த 33 ஆண்டுகளாக இந்த பகுதியில்,மெஹ்ரப் ஹாஷ்மி என்பவர் இஸ்லாமிய பள்ளி யான மதரசாவை நடத்தி வருகிறார். இந்த கிராமத்தில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்த கிராமத்தில் வேறு பள்ளி இல்லாத காரணத்தால், பெரும் பான்மையான இந்துக்களும் தங்கள் குழந்தைகளை இங்கு தான் சேர்த்துள்ளனர்.ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் இந்த பள்ளியில் போதிக்கப்படுகின்றன.

பைபிள், பகவத் கீதை ஆகியவையும் போதிக்கப்படுகின்றன.காலையில் பள்ளி துவங்கியதும், பிரார்த்தனைக் கூடத்தில், சரஸ்வதி பாடலுடன் வகுப்புகள் ஆரம்பமாகிறது. "இஸ்லாமிய பள்ளியாக இருந்தாலும், மதசார்பற்ற முறையில் பாடங்கள் போதிக்கப் படுவதைக் கண்டு, அரசியல்வாதிகள் பலர் பாராட்டி விட்டு செல்கின்றனர் என, மெஹ்ரப் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்

நன்றி தினமலர்

Saturday, November 14, 2009

துபாய்-ன் நீருக்குள் ஹோட்டல்

நீருக்குள் ஹோட்டல்:














வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முயற்சியில் வெற்றி


வேளாண்மையிலும் நானோ தொழில்நுட்பத்தினை புகுத்திவிட முயன்றுவரும் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதன் முதல் மைல் கல்லை எட்டியுள்ளார்கள். தக்காளியை தமது பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் ஒரு வெற்றியை பெற்றுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் (carbon nanotubes) இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்தபோது அவர்கள் பெற்ற அவதானங்கள் வரும் காலத்தில் நானோ தொழில்நுட்பம் கொண்ட வேளாண்மைப் பிரயோகத்தில் ஏற்படப்போகும் சாத்தியங்கள், புரட்சிகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தலைமுடியின் தடிப்பில் 1/50000 என்னும் தடிப்பு கொண்ட கார்பன் நுண்குழாய்கள் கலந்து விதைக்கப்பட்ட தக்காளி விதைகள் சாதாரண விதைகளை விட வேகமாக முளை விட்டு வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆர்கன்சா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் தக்காளி விதைகளை காபன் நுண்குழாய்களுடன் சேர்ந்து சிறிதளவு மண் மற்றும் பாறை துகள்கள் உட் சேர்த்து விதைத்து பரீட்சித்தபோது அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதை அவதானித்துள்ளனர்.


இதில் முளைக்கும் போதான தாவர வித்துக்கள் அகத்துறிஞ்சும் நீரின் அளவை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

சாதாரணமாக 38.9 சதவீதமான நீரை வித்துக்கள் முளைக்கும் பொது அகத் துறிஞ்சுவதாகவும் ஆனால் காபன் சிறு குழாய்கள் கலந்து முளைக்கவிடப்பட்ட குழாய்கள் 57.6 வீத நீதை அகத்துறிஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியான விதைகள் சாதாரண நிலையைவிட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது வரை அந்த நுண்குழாய்கள் நீர் உள்ளீட்டை அதிகரிப்பதில் செலுத்தும் சரியான தாக்கம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதில் விஞ்ஞானிகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தாலும் இவ் அறிவியல் அடைவு வெகுவிரைவில் விவசாயத்தில் பெரும் புட்சியை உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Source http://ta.wikinews.org/      

Friday, November 13, 2009

தில்லியில் ரயில், பஸ்களில் பொதுடிக்கெட் அறிமுகம்


புதுதில்லி, நவ. 12: தில்லியில் மெட்ரோ ரயில், தில்லி அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்ய வசதியாக பொது டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தில்லி போக்குவரத்து துறை அமைச்சர் அரவிந்தர் சிங் நிருபர்களிடம் வியாழக்கிழமைக் கூறியதாவது: தலைநகர் தில்லியில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சென்று வர ஏதுவாக பொது டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சோதனை முயற்சியாக நவம்பர் 24ம் தேதி முதல் சில இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பின்னர் இதர பகுதிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது டிக்கெட் வசதி பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதற்கான தொடக்க விழாவையொட்டி யமுனை நதிக்கரை- நொய்டா இடையே 13.1 கிலோ மீட்டர் தொலைவிலான பகுதிகளுக்குள் பொதுடிக்கெட் வினியோகிக்கப்படும் என்றார் அரவிந்தர் சிங். தில்லி போக்குவரத்து கழகத்தின் பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு பொது டிக்கெட் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

Source-http://www.dinamani.com/

Thursday, November 12, 2009

சொல்லாததும் உண்மை -3