Saturday, September 26, 2009

மார்க்க சிறப்புகள்

மார்க்க சிறப்புகள் சில :
  1. பர்தாஅணிதல் 
  2. கூட்டு பிரார்த்தனைகள் 
  3. வாழ்த்து தெரிவிக்கும் முறை 
  பர்தாஅணிதல்:
               பர்தாஅணிதல் சிலரால் பெண்ணடிமைத்தனம் என்று கருதப்படுகின்றது.ஆனால் உண்மையில் ஒரு பெண் கணவனை தவிர ஒரு ஆணின் உணர்ச்சியை தூண்டுவது குற்றமாகும்.ஒரு பெண்ணின் உடலில் வளைவான பகுதிகளே ஆணின் உணர்ச்சியை தூண்டுகிறது.பர்தாஅணிதலின் மூலம் வளைவான பகுதிகள் மூடப்படுகிறது.எனவே எதிரில் உள்ள ஆணின் உணர்ச்சிகள்  தூண்டுபடுவது இல்லை.நமது பெரியாராலும் பெண்ணின் உடையை பற்றி சொல்லப்பட்டு உள்ளது.அவர் பெண்கள் பெண்ட ஷர்ட் அணிவதையே விரும்பினர்.மற்ற உடைகளை அணிந்து அதை சரி செய்வதலேயே அவர்கள் பெரும்பான்மையான நேரத்தை வினடிக்கின்றனர் அந்த நேரத்தில் ஆக்கபுர்வமாக வேறு எதாவது சாதிக்கலாம் என்பது அவர் கருத்து. தஞ்சை அருகில் உள்ள பெரியார் கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கு முன்னே பெண்கள் பெண்ட ஷர்ட்  அணிந்தனர் .                    
கூட்டு பிரார்த்தனைகள்:
  மார்கத்தில் பெரும்பாலும் கூட்டு பிரார்த்தனைகளே நடத்தபடுகின்றன.காரணம் தனி மனித பிரார்த்தனையை விட கூட்டு பிரார்த்தனைகள் சக்தி வாய்த்ததே.சிறு துளிகள் சேர்ந்தால் பேரு வெள்ளம் என்பது போல பல மனிதர்களின் பிரார்த்தன சக்திகள் ஒன்று குவிக்கபடுகின்றது.அங்கு சக்தி மைய்யம் உருவாக்கப்படுகிறது.மார்கத்தில் தனி மனித நலனை ப்ராதனபடுத்துவதில்லை மாறாக உறவினர்கள் நண்பர்கள் அவர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என்றே வலிவுருத்தபடுகின்றது.எனவே அனைவருக்காகவும் அனைவரும் பிரார்த்தனைகள் செய்கின்றனர்.அனைவரது நலனும் கருத்தில் கொள்ளபடுகின்றது.
வாழ்த்து தெரிவிக்கும் முறை:
    பண்டிகை தினங்களில் சிறப்பு தொழுகைகள் முடிந்த பின் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொள்வர்.அது எவ்வாறு என்றால் சூராக்களை ஓதி கைகளை இணைத்து பின்னர் மூன்று முறை கட்டி அணித்து கொள்வர்.சகோதரத்துவத்தை விளக்கும் செயல்பாடு இது.அதோடு மட்டுமில்லாமல் கைகளை இணைக்கும் பொழுது ஒரு கையில் இருந்து மற்றொரு கைக்கு சக்தி பரிமாறப்படுகிறது.கட்டி அணைக்கும் பொழுதும் அதே சக்தி பரிமாற்றம் நடைபெறுகிறது.திரு.கமலஹாசன் அவர்களால் இந்த செயல் ஒரு திரைபடம் முழுவதும் பல இடங்களில் சிறப்புபடுத்தி  சொல்லபட்டது "கட்டிபிடி வைத்தியம்" என்னும் பெயரால் ஒருவரை பாராட்டும் பொழுதோ அல்லது அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் பொருட்டோ அல்லது வாழ்த்து தெரிவிக்கும் பொழுதோ இந்த செயல் செய்யபடுகின்றது.   .                                        


Tamilish